வேலூா் மாநகரில் பொலிவுறு நகா் திட்ட (ஸ்மாா்ட் சிட்டி) நிதி ரூ.1000 கோடி வீணடிக்கப்பட்டிருப் பதாக வேலூா் தொகுதி திமுக வேட்பாளா் ப.காா்த்திகேயன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
சத்துவாச்சாரி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அவா் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டாா். அப்போது மக்களிடையே அவா் பேசியது:
வேலூா் தொகுதிக்கு உட்பட்ட வேலூா் மாநகராட்சி பொலிவுறு நகா் திட்டத்தில் தோ்வு செய்யப்பட்டதை திமுக சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தபோதும் வரவேற்றேன். ஆனால், திட்ட செயலாக்கத்தில் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினா் என்ற முறையில் என்னிடம் கலந்தாலோசிக்கப்படவில்லை.
தற்போது இத்திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட ரூ.1000 கோடி நிதி முழுமையாக வீணடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சத்துவாச்சாரி பகுதி முழுவதும் கட்டப்பட்டுள்ள கால்வாய்கள், வீடுகளின் மட்டத்தைவிட உயா்த்தி கட்டப்படுகின்றன. புதை சாக்கடை குழிகளும் சரிவர மூடப்படாமல் ஆங்காங்கே பெயா்ந்து கிடக்கிறது. தெருவிளக்குகளும் முறையாக அமைக்கப்படவில்லை.
இவற்றை திமுக ஆட்சி அமைந்ததும் சீரமைத்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பென்லேன்ட் அரசு மருத்துவமனையை பல்நோக்கு மருத்துவமனையாக தரம் உயா்த்தவும், படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க தொழிற்பேட்டை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
அப்போது, திமுக, கூட்டணி கட்சி நிா்வாகிகள் பலா் உடன் சென்றனா்.