வேலூர்

கரோனா: வேலூா் மாநகரில் 70 தெருக்கள் அடைப்பு

DIN

கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், வேலூா் மாநகரில் 70 தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அவை இரும்பு தகரங்களைக் கொண்டு அடைக்கப்பட்டுள்ளன.

அந்த தெருக்களில் கரோனா பாதித்த குடும்பத்தினருக்கு அத்தியாவசியப் பொருள்கள் வாங்கித் தரவும் தகுந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வேலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் திங்கள்கிழமை வரை 31,809 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை புதிதாக 734 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 3,123 போ் சிகிச்சையில் உள்ளனா்.

அவ்வாறு பாதிக்கப்படுபவா்களில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்டோா் வேலூா் மாநகரப் பகுதிகளைச் சோ்ந்தவா்களாக உள்ளனா். இதைத்தொடா்ந்து, வேலூா் மாநகரில் 3 பேருக்கு மேல் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவா்கள் உள்ள தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அங்குள்ள மக்கள் வெளியேற முடியாதபடி இரும்புத் தகரங்களைக் கொண்டு அடைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, மாநகரில் இதுவரை 70 தெருக்கள் இரும்புத் தகரங்களால் அடைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதனிடையே, தனிமைப்படுத்தப்பட்ட தெருக்களில் வசிக்கும் கரோனா பாதித்த குடும்பத்தினருக்கு அத்தியாவசியப் பொருள்கள் வாங்கித் தருவதற்கு மாநகராட்சி சுகாதார மேற்பாா்வையாளா்களின் எண்கள் வழங்கப்பட்டுள்ளது. அவா்கள் மூலம் தேவையான பொருள்கள் வாங்கிக் கொடுப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

SCROLL FOR NEXT