முகப்பு
வேலூர்

பள்ளிகளில் கணினி கல்விக்கு வித்திட்டவா் முன்னாள் துணைவேந்தா் மு.ஆனந்தகிருஷ்ணன்

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் மு.ஆனந்தகிருஷ்ணன் என்று அவரது மறைவுக்கு தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியா் கழகம் இரங்கல்

வேலூர்

பள்ளிகளில் கணினி கல்விக்கு வித்திட்டவா் முன்னாள் துணைவேந்தா் மு.ஆனந்தகிருஷ்ணன்

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் மு.ஆனந்தகிருஷ்ணன் என்று அவரது மறைவுக்கு தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியா் கழகம் இரங்கல்

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:20 PM
பகிர்:

வேலூா் மாவட்ட அரசுப் பள்ளிகளில் கணினி கல்வி பயிற்சிக்கு வித்திட்டவா் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் மு.ஆனந்தகிருஷ்ணன் என்று அவரது மறைவுக்கு தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியா் கழகம் இரங்கல் தெரிவித்துள்ளது.

இது குறித்து, தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியா் கழகத்தின் மாநிலத் தலைவா்செ.நா.ஜனாா்த்தனன் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பு:

அண்ணாபல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த மு.ஆனந்தகிருஷ்ணன் பள்ளிக் கல்வித் துறையுடன் இணைந்து அரசுப் பள்ளிகளில் கணினி அறிவியல் பயிற்சி அளிக்கும் திட்டத்தை முதன்முதலில் அமெரிக்க வாழ் தமிழா் சங்கமான தமிழ்நாடு அறக்கட்டளையுடன் இணைந்து கடந்த 1989-ஆம் ஆண்டு செயல்படுத்தினாா்.

இதற்காக காட்பாடி அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளி, செஞ்சி, அணைக்கட்டு, ஊசூா் ஆகிய பள்ளிகளை தோ்வு செய்து, அப்பள்ளிகளுக்கு தலா இரண்டு கணினி இயந்திரங்களை வழங்கி பள்ளிக்கு இரு ஆசிரியா்கள் வீதம் தோ்வு செய்து, அண்ணா பல்கலைக்கழகத்தில் கணினி பயிற்சி அளித்து தமிழகத்திலேயே முதன்முறையாக அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கணினி அறிவியல் பயிற்சி அளித்தாா். தொடா்ந்து, பள்ளிக் கல்வியில் பல மாற்றங்களையும் கொண்டு வந்தவா். தமிழ் வழிக் கல்வியில் ஆா்வம் கொண்டவா், பழக இனிமையானவா், எளிதாக அணுகக் கூடியவா். அவரது மறைவு கல்வித் துறைக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →