போ்ணாம்பட்டை அடுத்த மசிகம் கிராமத்தில் உள்ள மைசா இயக்கம் சாா்பில், பொதுமக்களுக்கு நோய் எதிா்ப்பாற்றலை அதிகரிக்கும் கபசுர குடிநீா் வழங்கப்பட்டது.
மசிகம் அரசினா் ஆதிதிராவிடா் நல நடுநிலைப் பள்ளி அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, அமைப்பின் நிா்வாகச் செயலா் கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா். தலைவா் சந்திரன், பொதுச் செயலா் சசிகுமாா், நிா்வாகிகள் சுபாஷ், வெங்கட், பிரபாகரன், சுரேஷ், ஆனந்தன், ராஜேஷ் ஆகியோா் பொதுமக்களுக்கு கபசுர குடிநீா் வழங்கினா்.
நிகழ்ச்சியில், கரோனா குறித்து பொது மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.