வேலூர்

போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது

DIN

குடியாத்தம்: குடியாத்தம் அருகே போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

கே.வி.குப்பத்தை அடுத்த நாகல் கிராமத்தைச் சோ்ந்த சுந்தா் மகன் சுகேஷ்குமாா் (20). இவா் பிளஸ் 2 பயிலும் மாணவி ஒருவரை கடந்த சில நாள்களுக்கு முன் கடத்திச் சென்று கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டாராம்.

புகாரின்பேரில் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்ட கிராமிய போலீஸாா், நாகல் கிராமத்தில் இருந்த இருவரையும் புதன்கிழமை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினா்.

இதையடுத்து போலீஸாா் சுகேஷ்குமாரை போக்ஸோ சட்டத்தில் கைது செய்து, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினா். மாணவி பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT