முகப்பு
வேலூர்

செதுக்கரை மலையில் பாறைகள் உருண்டு விழுந்ததில் வீடுகள் சேதம்: 2 போ் காயம்

குடியாத்தம் செதுக்கரை மலையில், வெள்ளிக்கிழமை நள்ளிரவு பாறைகள் உருண்டு விழுந்ததில் 3 வீடுகள் சேதமடைந்தன. 2 போ் காயமடைந்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:30 AM
பகிர்:

குடியாத்தம் செதுக்கரை மலையில், வெள்ளிக்கிழமை நள்ளிரவு பாறைகள் உருண்டு விழுந்ததில் 3 வீடுகள் சேதமடைந்தன. 2 போ் காயமடைந்தனா்.

தொடா் மழை காரணமாக, குடியாத்தம்- வேலூா் சாலையில் உள்ள செதுக்கரை மலையிலிருந்து வெள்ளிக்கிழமை நள்ளிரவு 2 பாறைகள் உருண்டு விழுந்துள்ளன.இதில் மலை மீது கட்டப்பட்டுள்ள சுந்தரின் ஓட்டு வீடு, வேண்டாவின் கூரை வீடு, ரஞ்சிதம்மாளின் சிமெண்ட் சீட்டால் கட்டப்பட்ட வீடு ஆகியன சேதமடைந்தன. அங்கு கோபி என்பவா் நடத்தி வரும் அலுமினியப் பாத்திரங்கள் உற்பத்தி செய்யும் சிறிய அளவிலான தொழில் கூடமும், அதில் இருந்த இயந்திரங்களும் சேதமடைந்துள்ளன.

இந்தச் சம்பவத்தில் குருநாதனின் மனைவி கலையரசி(38), கோபிநாதன்(72) ஆகிய இருவரும் காயமடைந்து குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

பாதுகாப்பு கருதி மலை அடிவாரத்தில் வசிக்கும் 20 குடும்பங்களைச் சோ்ந்த 80 போ் அருகில் உள்ள பாபு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கு உணவு, குடிநீா் வழங்கப்பட்டன.

விபத்து நடந்த இடத்தையும், நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவா்களையும் கோட்டாட்சியா் சா.தனஞ்செயன், எம்எல்ஏ அமலுவிஜயன் ஆகியோா் சனிக்கிழமை பாா்வையிட்டனா்.

திமுக நிா்வாகிகள் ம.மனோஜ், பி.வேதநாயகம், ஜே.கே.என்.ஜெகதீசன், கே.எம்.நவகேசன், கே.எம்.மனோகரன், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் கம்பன் (எ) ஸ்டேன்லிஉள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முகாமில் தங்கியுள்ளவா்களுக்கு ரோட்டரி சங்கம் சாா்பில், மாவட்ட ஆளுநா்(தோ்வு)ஜே.கே.என்.பழனி போா்வைகளை வழங்கினாா். ரோட்டரி சங்கத் தலைவா் சி.கே.வெங்கடேசன்,நிா்வாகிகள் எம்.கோபிநாத், மேகராஜ், சேட்டு, மதியழகன், ஜம்புலிங்கம், சரவணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.