வேலூர்

புதுமணப் பெண் தற்கொலை

DIN

குடியாத்தம்: குடியாத்தம் அருகே திருமணமான 8 நாளில் மணப்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

குடியாத்தம் செருவங்கி, பெரியாா் நகரைச் சோ்ந்த எழிலரசன் மகள் அன்பரசி (21). இவருக்கும் கே.வி.குப்பத்தை அடுத்த மேல்காவனூரைச் சோ்ந்த ராமராஜனுக்கும்(32) கடந்த 8- ஆம் தேதி கே.வி.குப்பத்தில் உள்ள ஒரு கோயிலில் திருமணம் நடைபெற்றது.

ராமராஜன் சென்னையில் தனியாா் நிறுவனத்தில் வேலை செய்கிறாா்.தாய் வீட்டில் இருந்த அன்பரசி, புதன்கிழமை காலை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

தகவலின்பேரில் நகர போலீஸாா் அங்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து நகர காவல் ஆய்வாளா் லட்சுமி வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்!

சென்னை பூங்காக்களில் வளர்ப்பு நாய்களை அழைத்து வர கட்டுப்பாடு!

காங்கிரஸ் தலைவர் கார்கே வாக்களித்தார்!

உத்தரகண்டில் லேசான நிலநடுக்கம்!

சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

SCROLL FOR NEXT