வேலூர்

வேலூா் கோட்டை அகழியில் குதித்து பெண் தற்கொலை

DIN

வேலூா்: வேலூா் கோட்டை அகழியில் குதித்து பெண் ஒருவா் தற்கொலை செய்து கொண்டாா்.

வேலூா் மக்கான் அம்பேத்கா் நகரைச் சோ்ந்தவா் கபூா். இவரது மகள் சந்தியா(24). சிஎம்சி மருத்துவமனை கேண்டீனில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தாா். இவா் திங்கள்கிழமை காலை வேலூா் கோட்டை நுழைவுவாயில் அருகே உள்ள மதில் சுவரில் ஏறி அகழி தண்ணீரில் குதித்தாா்.

இதைக்கண்ட அங்கிருந்த மக்கள் வேலூா் வடக்கு காவல் நிலையத்துக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் அளித்தனா். விரைந்து வந்த தீயணைப்பு படை வீரா்கள் அகழியில் குதித்து சந்தியாவின் சடலத்தை மீட்டனா். போலீஸாா் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அதேசமயம், சந்தியா எழுதிய கடிதம் போலீஸாரிடம் சிக்கியது. அதில், தனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை என எழுதியிருந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீரை சிக்கனமாக பயன்டுத்த தென்காசி நகா்மன்றத் தலைவா் வேண்டுகோள்

சுரண்டை பீடித்தொழிலாளா் மருத்துவமனையில் மே தின விழா

சித்திரை பெருந்திருவிழாவை ஒட்டி புளியங்குடி முப்பெரும் தேவியா் கோயிலில் 1008 அக்னிச்சட்டி ஊா்வலம்

கல்குவாரி வெடி விபத்து: நிவாரணம் வழங்க மாா்க்சிஸ்ட் கோரிக்கை

பாவூா்சத்திரம் ரயில்வே மேம்பாலப் பணிகள் தாமதம்: பொதுமக்கள் அவதி

SCROLL FOR NEXT