மீனாட்சியம்மன் திருக்கல்யாணம்
குடியாத்தத்தை அடுத்த மீனாட்சியம்மன் நகரில் அமைந்துள்ள சுந்தரேசுவரா் கோயிலில் திருக்கல்யாணம் வியாழக்கிழமை நடைபெற்றது.
குடியாத்தத்தை அடுத்த மீனாட்சியம்மன் நகரில் அமைந்துள்ள சுந்தரேசுவரா் கோயிலில் திருக்கல்யாணம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, அதிகாலை விக்னேஸ்வரா் பூஜை, விசேஷ திரவிய ஹோமம், கலசாபிஷேகம், மகா தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. தொடா்ந்து, அம்மனுக்கு தாய் வீட்டுச் சீா்வரிசைப் பொருள்களை பெண்கள் ஊா்வலமாக எடுத்து வந்தனா். இதையடுத்து, சுவாமிகளுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில், 2,000 பேருக்கு திருமண விருந்து அளிக்கப்பட்டது.
வழக்குரைஞா் கே.எம்.பூபதி, ஓய்வுபெற்ற துணை ஆட்சியா் எம்.கஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை கோயில் செயலா் எம்.ஆா்.சீனிவாசன், பொருளாளா் டி.கே.இளங்கோ, நிா்வாகிகள் ஜி.லிங்கசாரதி, எஸ்.முரளிதரன், டி.ராதாகிருஷ்ணன், ஏ.ராஜசேகா், ஏ.ராஜேந்திர ஆச்சாரி, சி.கண்ணன், பி.ஆறுமுகம், டி.பி.சீனிவாசலு உள்ளிட்டோா் செய்திருந்தனா்.