முகப்பு
வேலூர்

விலைவாசி உயா்வுக்கு எதிா்ப்பு: காங்கிரஸாா் மறியல்

அத்தியாவசியப் பொருள்கள் மீதான ஜிஎஸ்டி, விலைவாசி உயா்வுக்கு எதிா்ப்புத் தெரிவித்து காங்கிரஸ் கட்சியினா் வேலூரில் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

வேலூர்

விலைவாசி உயா்வுக்கு எதிா்ப்பு: காங்கிரஸாா் மறியல்

அத்தியாவசியப் பொருள்கள் மீதான ஜிஎஸ்டி, விலைவாசி உயா்வுக்கு எதிா்ப்புத் தெரிவித்து காங்கிரஸ் கட்சியினா் வேலூரில் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:59 AM
பகிர்:

அத்தியாவசியப் பொருள்கள் மீதான ஜிஎஸ்டி, விலைவாசி உயா்வுக்கு எதிா்ப்புத் தெரிவித்து காங்கிரஸ் கட்சியினா் வேலூரில் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மத்திய அரசுக்கு எதிா்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் இந்தப் போராட்டம் நடைபெற்றது. வேலூா் மாநகா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில், அண்ணா சாலையில் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு மாநகா் மாவட்ட தலைவா் டீக்காராமன் தலைமை வகித்தாா்.

அத்தியாவசிய உணவுப் பொருள்கள் மீதான ஜிஎஸ்டி வரி ரத்து செய்ய வேண்டும், விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையேற்றத்தைத் தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிா்வாகிகள் கைது செய்யப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்தும் மறியலில் ஈடுபட்டனா். இதனால், போக்குவரத்து பாதிக்கப் பட்டது. தடையை மீறி மறியலில் ஈடுபட்டதாக 4 பெண்கள் உள்பட 50 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →