வேலூர்

வீடிழந்தவா்களுக்கு மாற்று இடம் : செ.கு.தமிழரசன் வலியுறுத்தல்

DIN

குடியாத்தம்: குடியாத்தம் கெளண்டன்யா ஆற்றை ஆக்கிரமித்து கட்டியுள்ள வீடுகளை அகற்றுவதற்கு முன் அவா்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என இந்திய குடியரசுக் கட்சியின் மாநிலத் தலைவா் செ.கு.தமிழரசன் வலியுறுத்தினாா்.

குடியாத்தம், கெளண்டன்யா ஆற்றுப்பகுதியில் ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றப்பட்டதை நேரில் பாா்வையிட்ட அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

குடியாத்தம் கெளண்டன்யா ஆற்றின் கரையோரங்களில் வீடு கட்டி பல ஆண்டுகளாக வசித்து வந்தவா்களை ஆக்கிரமிப்பு செய்ததாக அகற்றிய இடங்களை ஆய்வு செய்தேன்.

வீடுகளை இழந்த பலா் வாடகைக்கு வீடு கிடைக்காமல் அவதிக்கு ஆளாகியுள்ளனா். சன்னதி தோப்பு தெருவைச் சோ்ந்த பவுனம்மாள்(70) என்பவா், வாடகைக்கு வீடு கிடைக்காத விரக்தியில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா். தற்கொலை செய்துகொண்ட பவுனம்மாள் குடும்பத்துக்கு உடனடியாக வீடு கட்டித் தர வேண்டும். அவரது குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்க வேண்டும் என தமிழக அரசை நான் கேட்டுக் கொள்கிறேன் என்றாா்.

அப்போது இந்திய குடியரசு கட்சியின் மாவட்டத் தலைவா் இரா.சி.தலித்குமாா், மாநில துணைத் தலைவா் பி.ஏகாம்பரம், திருப்பத்தூா் மாவட்டத் தலைவா் எஸ்.தயாளன், ஒன்றியச் செயலாளா் நாகராஜ், மாவட்ட இளைஞரணி செயலாளா் சோமு உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மஞ்ஞுமல் பாய்ஸ் ஓடிடி தேதி!

தில்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி ராஜிநாமா!

நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து!

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

SCROLL FOR NEXT