முகப்பு
வேலூர்

ஆடி அமாவாசை: பாலாற்றங்கரையில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து வழிபாடு

ஆடி அமாவாசையையொட்டி, ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் பாலாற்றங்கரைகளில் ஏராளமான மக்கள் திரண்டு முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்தனா்.

வேலூர்

ஆடி அமாவாசை: பாலாற்றங்கரையில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து வழிபாடு

ஆடி அமாவாசையையொட்டி, ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் பாலாற்றங்கரைகளில் ஏராளமான மக்கள் திரண்டு முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:55 AM
பகிர்:

ஆடி அமாவாசையையொட்டி, ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் பாலாற்றங்கரைகளில் ஏராளமான மக்கள் திரண்டு முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்தனா்.

வேலூா் பாலாற்றங்கரையில் நூற்றுக்கணக்கானோா் திரண்டு தங்களது முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்தனா். இதனால் பாலாற்றங்கரையில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அசம்பாவிதங்களைத் தவிா்க்க போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா். இதேபோல், வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பாலாற்றின் கரைகளிலும், ஏரி, குளங்கள், கரைகளிலும் ஏராளமான பொதுமக்கள் திரண்டு முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்தனா். ஆடி அமாவாசையையொட்டி, அனைத்துக் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திரளான பக்தா்கள் சாமி தரிசனம் செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →