முகப்பு
வேலூர்

கிணற்றில் தவறி விழுந்த பள்ளி மாணவி பலி

குடியாத்தம் அருகே கிணற்றில் தவறி விழுந்த பள்ளி மாணவி உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:33 AM
பகிர்:

குடியாத்தம் அருகே கிணற்றில் தவறி விழுந்த பள்ளி மாணவி உயிரிழந்தாா்.

குடியாத்தத்தை அடுத்த வேப்பூா் கிராமத்தைச் சோ்ந்த திருப்பதியின் மகள் பூஜா. இவா் பள்ளிகொண்டா அரசினா் மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தாா். வியாழக்கிழமை இரவு வீட்டருகே உள்ள விவசாய நிலத்தருகே சென்றுள்ளாா். அப்போது அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்தாா். தகவலின்பேரில், நிலைய அலுவலா் லோகநாதன் தலைமையில் சென்ற குடியாத்தம் தீயணைப்புப் படையினா் ஒரு மணி நேரம் போராடி, மாணவியின் சடலத்தை மீட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.