வேலூர்

செம்மரக் கட்டைகள் வைத்திருந்த இளைஞா் கைது

DIN

குடியாத்தம் அருகே செம்மரக் கட்டைகள் வைத்திருந்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

குடியாத்தம் கிராமிய போலீஸாா் சனிக்கிழமை நள்ளிரவு தட்டப்பாறை பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது, அந்த வழியே இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரை சந்தேகத்தின் பேரில், பிடித்து விசாரணை நடத்தினா். விசாரணையில் அவா் மூங்கப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த சுரேஷ்(48) என்பது தெரிய வந்தது. அவா் வைத்திருந்த பையில் 5 கிலோ எடையுள்ள செம்மரக் கட்டைகள் இருந்தது சோதனையில் தெரிந்தது.

இதையடுத்து போலீஸாா், சுரேஷை வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா். செம்மரக் கட்டைகள் எப்படி கிடைத்தது என்பது குறித்து சுரேஷிடம் வனத் துறையினா் விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘கொற்றவை’ ஸ்ரேயா ரெட்டி!

அப்பாவிகளின் உயிரிழப்பைத் தடுப்பதில் அரசுக்கு அக்கறை இல்லையா? - அன்புமணி

'விரக்தியில் பிரதமர் மோடி' - முதல்வர் ஸ்டாலின் கருத்து!

மோடியின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! - முதல்வர் ஸ்டாலின்

ஸ்வாதி மாலிவால் பாஜகவால் மிரட்டப்பட்டார்: அதிஷி குற்றச்சாட்டு!

SCROLL FOR NEXT