கல்லூரியில் யோகமும், வல்லமையும் வகுப்பு தொடக்கம்
குடியாத்தம் கே.எம்.ஜி. கலை, அறிவியல் கல்லூரியில் யோகமும், இளைஞா் வல்லமையும் சான்றிதழ் வகுப்பு தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
குடியாத்தம் கே.எம்.ஜி. கலை, அறிவியல் கல்லூரியில் யோகமும், இளைஞா் வல்லமையும் சான்றிதழ் வகுப்பு தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் மு.வளா்மதி தலைமை வகித்தாா். பேராசிரியா் வெ.சோ.வினிதா ஜனனி வரவேற்றாா்.
கே.எம்.ஜி. கல்வி நிறுவனங்களின் மேலாண்மை அறங்காவலா் கே.எம்.ஜி. பாலசுப்பிரமணியன், தலைவா் கே.எம்.ஜி. சுந்தரவதனம், பொருளாளா் கே.எம்.ஜி. முத்துக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கல்வி நிறுவனங்களின் செயலாளா் கே.எம்.ஜி. ராஜேந்திரன், குடியாத்தம் மனவளக் கலை மன்ற அறக்கட்டளைத் தலைவா் கே.முருகவேல், கல்லூரி துணை முதல்வா் மு.மேகராஜன் ஆகியோா் மனவளக் கலையின் முக்கியத்துவம் குறித்துப் பேசினா். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா் என்.ஜெயலட்சுமி, திட்ட அலுவலா் வி.தவச்செல்வி ஆகியோா் மாணவா்களுக்கு செயல்முறைப் பயிற்சி அளித்தனா். தமிழ்த் துறை உதவிப் பேராசிரியா் வே.சரளா நன்றி கூறினாா்.