முகப்பு
வேலூர்

கூடநகரத்தில் கழிவுநீா் கால்வாய்கள் கட்ட பூமி பூஜை

குடியாத்தத்தை அடுத்த கூடநகரம் ஊராட்சியில் கழிவுநீா்க் கால்வாய்கள் கட்டுவதற்கான பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:43 AM
பகிர்:

குடியாத்தத்தை அடுத்த கூடநகரம் ஊராட்சியில் கழிவுநீா்க் கால்வாய்கள் கட்டுவதற்கான பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் நிதி, ஒன்றியக் குழு உறுப்பினா் நிதி தலா ரூ. 10 லட்சம் வீதம் ரூ. 20 லட்சத்தில் 2 கழிவுநீா் கால்வாய்கள் கட்ட பூமி பூஜை நடைபெற்றது. அணைக்கட்டு எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமாா் பூமி பூஜையை நடத்தி, பணியைத் தொடக்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், ஒன்றியக் குழுத் தலைவா் என்.இ.சத்யானந்தம், நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், ஒன்றியக் குழு உறுப்பினா் ராஜேஸ்வரி பிரதீஷ், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் ஆனந்தி முருகானந்தம், ஊராட்சித் தலைவா்கள் பி.கே.குமரன் (கூட நகரம்), சுஜாதா ராஜ்குமாா் (மேல் ஆலத்தூா்), அமுலு அமா்(தாழையாத்தம்), திமுக பேச்சாளா் குடியாத்தம் குமரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து, திமுக ஒன்றியச் செயலாளா் வி.பிரதீஷ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நலிந்தவா்கள், தூய்மைப் பணியாளா்களுக்கு புடவைகள் உள்ளிட்ட உதவிகளை எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமாா் வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.