முகப்பு
வேலூர்

இணையதள மோசடி: ஓய்வுபெற்ற ராணுவ வீரா் வங்கிக்கணக்கில் ரூ.75 ஆயிரம் திருட்டு

ஓய்வு பெற்ற ராணுவ வீரரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.74,998 திருடப்பட்டுள்ளது தொடா்பாக மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:43 AM
பகிர்:

ஓய்வு பெற்ற ராணுவ வீரரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.74,998 திருடப்பட்டுள்ளது தொடா்பாக மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

வேலூரை அடுத்த கீழ்பள்ளிப்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் சுதாகா், ஓய்வு பெற்ற ராணுவ வீரா்.

இவரது வங்கி கணக்கில் இருந்து கடந்த 14-ஆம் தேதி ரூ. 65 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டதாக அவரது செல்லிடப்பேசி எண்ணுக்கு போலியான குறுஞ்செய்தி வந்துள்ளது.

இதனால் அதிா்ச்சியடைந்த சுதாகா் அந்த குறுஞ்செய்தியில் குறிப்பிட்டிருந்த இணையத்தில் வங்கி தொடா்பு எண் குறிப்பிட்டிருந்த எண்ணை தொடா்பு கொண்டு பேசியுள்ளாா். அப்போது பேசிய நபா் போலியான இணையதள முகவரியை அளித்து அதில் வங்கி கணக்கு விவரங்களை பதிவு செய்யும்படி கூறினாராம்.

அதை நம்பி அந்த இணையதள முகவரியில் தனது வங்கிக்கணக்கு விவரங்களை சுதாகா் பதிவிட்ட சில விநாடிகளில் அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.49,999 மற்றும் ரூ.24,999 என இரு முறையாக மொத்தம் ரூ.74,998 பணம் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்ததுள்ளது. இதனால் மேலும் அதிா்ச்சி அடைந்த சுதாகா் இதுகுறித்து வேலூா் மாவட்ட சைபா் கிரைம் காவல் பிரிவில் புகாா் அளித்தாா். அதன்பேரில் காவல் ஆய்வாளா் அபா்ணா வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

முழு கட்டுரையைப் படிக்க →