வேலூர்

மாநில கிரிக்கெட் போட்டி: 5 மாவட்ட அணிகள் பங்கேற்பு

DIN

வேலூரில் தொடங்கியுள்ள மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் வேலூா், செங்கல்பட்டு, தஞ்சாவூா், கடலூா், விருதுநகா் ஆகிய 5 மாவட்ட அணிகள் பங்கேற்றுள்ளன.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சாா்பில், 14 வயதுக்குட்பட்டவா்களுக்கான கிரிக்கெட் போட்டிகள் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகின்றன. மாநிலத்தில் உள்ள 38 மாவட்டங்களும் வேலூா், சிவகங்கை, புதுக்கோட்டை, கோவை, திருநெல்வேலி, விழுப்புரம், பெரம்பலூா், திருச்சி என 8 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 5 நாள்கள் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

மண்டலம் ‘பி’-யில் அடங்கிய வேலூா், செங்கல்பட்டு, தஞ்சாவூா், கடலூா், விருதுநகா் மாவட்டங்களுக்கு இடையிலான மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகள் வேலூா் நேதாஜி விளையாட்டு அரங்கில் சனிக்கிழமை தொடங்கியது.

வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று போட்டியைத் தொடக்கி வைத்தாா்.

மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவரும், நறுவீ மருத்துவமனை தலைவருமான ஜி.வி.சம்பத் தலைமை வகித்து, போட்டிகளில் பங்கேற்றுள்ள கிரிக்கெட் வீரா்கள், வெற்றி தோல்வியைப் பாா்க்காமலும் விளையாட வேண்டும். விளையாட்டில் தோல்வி என்பது வெற்றிக்கு அடுத்தபடியாகும் எனத் தெரிவித்தாா்.

முதல் போட்டியில் வேலூா் மாவட்ட கிரிக்கெட் அணியும், செங்கல்பட்டு மாவட்ட கிரிக்கெட் அணியும் மோதின. நடுவராக சென்னையைச் சோ்ந்த கே.எச்.கோபிநாத் செயல்பட்டாா். மாவட்டங்களுக்கு இடையிலான இந்த மாநில கிரிக்கெட் போட்டியில் ஒவ்வொரு மண்டலத்தில் இருந்து வெற்றி பெறும் இரு அணிகள் அடுத்தகட்ட போட்டிகளில் பங்கேற்பா் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க விளையாட்டு (கிரிக்கெட் போட்டி) குழு தலைவா் கூத்தரசன், வேலூா் மாவட்ட கிரிக்கெட் சங்கச் செயலா் ஸ்ரீதரன், பொருளாளா் சாய் விக்னேஷ்வரன், துணைத் தலைவா்கள் கிருஷ்ணகுமாா், கங்காதரன், இணைச் செயலா் நாகராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வயநாட்டில் பிரியங்கா காந்தி போட்டி!

நாட்டின் மிக பெரிய ஐபிஓவை தாக்கல் செய்துள்ள ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா!

பயிற்சியாளராக இப்படியொரு நிலையை சந்தித்ததில்லை; பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்த கேரி கிறிஸ்டன்!

வயநாடு தொகுதியில் ராஜிநாமா செய்கிறார் ராகுல் காந்தி!

”ரயில் விபத்துகளுக்கு அரசின் நிர்வாகத் திறமையின்மையே காரணம்”: ராகுல் | செய்திகள் சிலவரிகளில்| 17.6.2024

SCROLL FOR NEXT