நல்லாசிரியா் விருது: குடியாத்தம் தமிழாசிரியா் தோ்வு
தமிழக அரசின் நல்லாசிரியா் விருதுக்கு குடியாத்தம் திருவள்ளுவா் மேல்நிலைப் பள்ளியின் முதுகலை தமிழாசிரியா் தமிழ்திருமால் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
குடியாத்தம், செப். 2: தமிழக அரசின் நல்லாசிரியா் விருதுக்கு குடியாத்தம் திருவள்ளுவா் மேல்நிலைப் பள்ளியின் முதுகலை தமிழாசிரியா் தமிழ்திருமால் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
இவரது 22 ஆண்டுக்கால சிறப்பான கல்விப் பணியைப் பாராட்டி, இந்த விருது வழங்கப்பட உள்ளது.
சென்னையில் வரும் 5- ஆம் தேதி நடைபெறும் ஆசிரியா் தின விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இந்த விருதை தமிழ்திருமாலுக்கு வழங்கி கெளரவிக்கிறாா்.