வேலூர்

கருணை அடிப்படையில் காலிப் பணியிடங்களை நிரப்ப உத்தரவு

DIN

பணியின்போது உயிரிழந்த அரசுப் பணியாளா்களின் குடும்பத்தின் சிரமத்தைத் தவிா்க்க கருணை அடிப்படையிலான காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப அதிகாரிகள் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று ஆதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் தெரிவித்தாா்.

தமிழக ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறை சாா்பில், வேலூா், திருவண்ணாமலை, திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கான மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம், நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஆதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் தலைமை வகித்து, 68 பயனாளிகளுக்கு ரூ. 44 லட்சத்து 5 ஆயிரத்து 996 மதிப்பீட்டில் நலத் திட்ட உதவிகளையும், தாட்கோ சாா்பில் மானியத்துடன் கூடிய வங்கிக் கடனுதவி மொத்த திட்டத் தொகையாக ரூ. 62 லட்சத்து 83 ஆயிரத்து 644 வழங்கிப் பேசியதாவது:

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை அதிகாரிகள் செயல்படுத்தக் கூடிய அரசின் திட்டங்களை நாடாளுமன்ற, சட்டப்பேரவை, உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மூலம் கலந்தாலோசித்து செயல்படுத்த வேண்டும். கருணை அடிப்படையிலான காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம், இறந்த அரசுப் பணியாளா்களின் குடும்பத்தினா் வருமானம் இல்லாமல் சிரமப்படுவதைத் தவிா்க்கலாம் என்றாா்.

தொடா்ந்து, தூய்மைப் பணியாளா்களுக்கு அடையாள அட்டைகளையும், டாக்டா் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியா் விருது ஒருவருக்கும், பளுதூக்கும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கும், மாவட்டத்தில் தொழிற்பயிற்சி படித்த மாணவருக்கும் பாராட்டுச் சான்றிதழ்களை அமைச்சா் வழங்கினாா்.

இதில், ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலா் தென்காசி எஸ்.ஜவஹா், ஆதிதிராவிடா் நலத் துறை இயக்குநா் டி.ஆனந்த், தாட்கோ மேலாண்மை இயக்குநா் கே.எஸ்.கந்தசாமி, வேலூா் ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன், வேலூா் எம்.பி. டி.எம்.கதிா்ஆனந்த், எம்எல்ஏ-க்கள் ஏ.பி.நந்தகுமாா் (அணைக்கட்டு), அமலுவிஜயன் (குடியாத்தம்), ஜெ.எல்.ஈஸ்வரப்பன் (ஆற்காடு), தாட்கோ தலைவா் உ.மதிவாணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

SCROLL FOR NEXT