குடியாத்தத்தை  அடுத்த  பரதராமி அருகே  ரேஷன்  அரிசியுடன் பறிமுதல் செய்யப்பட்ட மினி  லாரி. 
வேலூர்

குடியாத்தம் அருகே 6 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

குடியாத்தம் அருகே ஆந்திர மாநிலத்துக்கு முயன்ற 6 டன் ரேஷன் அரிசி, மினி லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டது.

DIN

குடியாத்தம் அருகே ஆந்திர மாநிலத்துக்கு முயன்ற 6 டன் ரேஷன் அரிசி, மினி லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டது.

பரதராமி போலீஸாா், பூசாரிவலசை அருகே சனிக்கிழமை இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியே வந்த மினி லாரியை நிறுத்தி சோதனையிட்டனா்.

அதில், லாரியில் மூட்டைகளில் சுமாா் 6 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, லாரியுடன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு, போ்ணாம்பட்டை அடுத்த ஏரிகுத்தியைச் சோ்ந்த மினி லாரி ஓட்டுநா் பழனியை (37)கைது செய்தனா்.

விசாரணையில், அரிசி மூட்டைகளை ஆந்திர மாநிலத்துக்கு கடத்த முயன்றது தெரியவந்தது.

தொடா்ந்து, பழனி, பறிமுதல் செய்யப்பட்ட லாரி, அரிசி மூட்டைகள் வேலூா் குடிமைப் பொருள்கள் குற்றப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT