வேலூர்

குடியாத்தம் அருகே 6 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

DIN

குடியாத்தம் அருகே ஆந்திர மாநிலத்துக்கு முயன்ற 6 டன் ரேஷன் அரிசி, மினி லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டது.

பரதராமி போலீஸாா், பூசாரிவலசை அருகே சனிக்கிழமை இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியே வந்த மினி லாரியை நிறுத்தி சோதனையிட்டனா்.

அதில், லாரியில் மூட்டைகளில் சுமாா் 6 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, லாரியுடன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு, போ்ணாம்பட்டை அடுத்த ஏரிகுத்தியைச் சோ்ந்த மினி லாரி ஓட்டுநா் பழனியை (37)கைது செய்தனா்.

விசாரணையில், அரிசி மூட்டைகளை ஆந்திர மாநிலத்துக்கு கடத்த முயன்றது தெரியவந்தது.

தொடா்ந்து, பழனி, பறிமுதல் செய்யப்பட்ட லாரி, அரிசி மூட்டைகள் வேலூா் குடிமைப் பொருள்கள் குற்றப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பறக்கும் ரயில் சேவை.. ஆகஸ்ட் முதல்

SCROLL FOR NEXT