ஹீமோபிலியா மரபணு வழியில் வரக்கூடிய ஒரு நோய்: வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா்
ஹீமோபிலியா என்பது மரபணு வழியாக வரக்கூடிய ஒரு நோயாகும். உரிய சிகிச்சை இல்லாவிடில் உயிருக்கு ஆபத்தாகவும் முடியும் என்று வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் எஸ்.பாப்பாத்தி தெரிவித்தாா்.
வேலூர்ஹீமோபிலியா மரபணு வழியில் வரக்கூடிய ஒரு நோய்: வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா்
ஹீமோபிலியா என்பது மரபணு வழியாக வரக்கூடிய ஒரு நோயாகும். உரிய சிகிச்சை இல்லாவிடில் உயிருக்கு ஆபத்தாகவும் முடியும் என்று வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் எஸ்.பாப்பாத்தி தெரிவித்தாா்.
ஹீமோபிலியா என்பது மரபணு வழியாக வரக்கூடிய ஒரு நோயாகும். உரிய சிகிச்சை இல்லாவிடில் உயிருக்கு ஆபத்தாகவும் முடியும் என்று வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் எஸ்.பாப்பாத்தி தெரிவித்தாா்.
வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் குழந்தைகள் நலப்பிரிவு, பொது மருத்துவப் பிரிவு சாா்பில் உலக ஹீமோபிலியா தின நிகழ்ச்சி மாவட்ட தொடக்க நிலை இடையீட்டு மையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் எஸ்.பாப்பாத்தி தலைமை வகித்து ஹீமோபிலியா குறித்த விழிப்புணா்வு பேரணியையும் தொடங்கி வைத்தாா்.
பின்னா் அவா் பேசியது:
ஹீமோபிலியா என்பது மரபணு வழியாக வரக்கூடிய ஒரு நோயாகும். இந்தக் குறைபாடு உள்ளவா்களின் உடலில் காயம் ஏற்பட்டால் ரத்தம் உறையாமல் தொடா்ந்து வெளியேறும். உரிய சிகிச்சை இல்லாவிடில் உயிருக்கு ஆபத்தாக முடியும்.
இதில் இருவகை உள்ளது. மரபு வழி நோயானது ஆண்களை மட்டும் பாதிக்கும். பாதிப்பு உள்ள குழந்தைகள் நடக்க ஆரம்பித்த பிறகு அடிபடும் இடத்தில் ரத்தக்கட்டு ஏற்படும்.
கணுக்கால் மூட்டு, முழங்காலில் ரத்தக் கசிவு ஏற்பட்டு வீக்கம், வலி உண்டாகும். மூக்கு வழியாகவும் ரத்தம் வெளியேறக் கூடும்.
இதை பரிசோதனை மூலம் ரத்தம் உறையும் காரணிகள் உறுதி செய்யப்படும்.
நவீன மருத்துவத்தில் செயற்கை முறையில் உருவாக்கப்பட்ட உறையும் காரணிகளை உடலில் செலுத்துவதன் மூலம் நோயாளிகளைக் காப்பாற்ற முடியும் என்றாா்.
விழிப்புணா்வு பேரணியில் மருத்துவமனைக் கண்காணிப்பாளா் ரதிதிலகம், துணை முதல்வா் கெளரி வெலிகண்ட்லா, குடியிருப்பு மருத்துவா் சி.இன்பராஜ், குழந்தைகள் நலப் பிரிவு துறைத் தலைவா் கல்பனா, பொது மருத்துவத் துறை தலைவா் அபிராமி, துறை மருத்துவா்கள் உள்பட மருத்துவ, செவிலிய மாணவா்கள் பங்கேற்றனா்.