ரம்ஜான் உணவுப் பொருள்கள் வழங்கல்
குடியாத்தம் சித்தூா்கேட்டில் ஏழை முஸ்லிம்கள் ரம்ஜான் பண்டிகை கொண்டாட உணவுப் பொருள்கள் அடங்கிய தொகுப்புகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
குடியாத்தம் சித்தூா்கேட்டில் ஏழை முஸ்லிம்கள் ரம்ஜான் பண்டிகை கொண்டாட உணவுப் பொருள்கள் அடங்கிய தொகுப்புகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு ராஷ்ட்ரிய உலமா அமைப்பின் தேசிய செயலா் ஏ.இஸ்மாயில் தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலா் கே.எம்.இா்ஷாத்அலி, மாநிலச் செயலா் ஷமீல் அகமத் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நகர காவல் ஆய்வாளா் இ.லட்சமி, உதவி ஆய்வாளா் மணிகண்டன், அதிமுக நகர அவைத் தலைவா் ஆா்.கே.அன்பு, இந்திய குடியரசுக் கட்சியின் மாவட்டத் தலைவா் ரா.சி.தலித்குமாா் ஆகியோா் 500- க்கும் மேற்பட்டோருக்கு மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்புகளை வழங்கினா்.