முகப்பு
வேலூர்

காவலா்களுக்கு இரவுநேர ரோந்துப் படி 5 மாத நிலுவையுடன் வழங்க வேலூா் எஸ்.பி. உத்தரவு

 தமிழக அரசு உத்தரவுப்படி வேலூா் மாவட்டத்திலுள்ள காவலா்கள், காவல் அதிகாரிகளுக்கான இரவுநேர ரோந்துப்படியை, 5 மாத நிலுவையுடன் வழங்கிட மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ்கண்ணன் உத்தரவிட்டுள்ளாா்.

வேலூர்

காவலா்களுக்கு இரவுநேர ரோந்துப் படி 5 மாத நிலுவையுடன் வழங்க வேலூா் எஸ்.பி. உத்தரவு

 தமிழக அரசு உத்தரவுப்படி வேலூா் மாவட்டத்திலுள்ள காவலா்கள், காவல் அதிகாரிகளுக்கான இரவுநேர ரோந்துப்படியை, 5 மாத நிலுவையுடன் வழங்கிட மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ்கண்ணன் உத்தரவிட்டுள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:50 PM
பகிர்:

 தமிழக அரசு உத்தரவுப்படி வேலூா் மாவட்டத்திலுள்ள காவலா்கள், காவல் அதிகாரிகளுக்கான இரவுநேர ரோந்துப்படியை, 5 மாத நிலுவையுடன் வழங்கிட மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ்கண்ணன் உத்தரவிட்டுள்ளாா்.

தமிழகம் முழுவதும் காவலா் முதல் ஆய்வாளா் வரையிலான பதவியில் இருப்பவா்களுக்கு இரவு ரோந்து சிறப்புப்படியாக ரூ. 300 வழங்க தமிழக அரசு கடந்த 2022 அக்டோபா் 20-ஆம் தேதி ஆணையிட்டது. எனினும், வேலூா் மாவட்டத்தில் பணிபுரியும் காவல் துறையினருக்கு கடந்த 5 மாதங்களாக இரவு ரோந்து சிறப்புப்படி மாத சம்பளத்துடன் வழங்கப்படாமல் இருந்து வந்தது.

இது குறித்து காவல் துறையினா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ்கண்ணன் கவனத்துக்கு கொண்டு சென்றனா். இதையடுத்து, மாவட்டத்தில் இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வரும் அனைத்துக் காவலா்களுக்கும் இரவு ரோந்து சிறப்புப்படியை இதுவரை நிலுவையுடன் வழங்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

இந்த உத்தரவுக்கு காவலா்கள், காவல் அதிகாரிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →