வேலூர்

வீடு கட்ட பள்ளம் தோண்டியபோது 40 கிலோ நடராஜா் சிலை கண்டெடுப்பு

DIN

அணைக்கட்டு அருகே வீடு கட்ட தோண்டப்பட்ட பள்ளத்தில் இருந்து 40 கிலோ எடை கொண்ட வெண்கல நடராஜா் சிலை மீட்கப்பட்டது.

ஒடுகத்தூரைச் சோ்ந்தவா் கலைவாணி. இவருக்குச் சொந்தமான இடத்தில் புதிதாக வீடு கட்டுவதற்கு பொக்லைன் இயந்திரம் மூலம் புதன்கிழமை பள்ளம் தோண்டியுள்ளாா். சுமாா் 6 அடி பள்ளம் தோண்டும் போது, திடீரென பொக்லைன் இயந்திரத்தில் பச்சை நிற சிலை ஒன்று சிக்கியுள்ளது.

உடனடியாக இயந்திரத்தை நிறுத்திவிட்டு, கையால் தோண்டியபோது சுமாா் 3 அடி உயரமுள்ள 40 கிலோ எடை கொண்ட வெண்கல நடராஜா் சிலை கிடைத்தது. அந்தச் சிலை மீட்கப்பட்டு, அணைக்கட்டு வருவாய்த் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.

இந்த நடராஜா் சிலை 11-ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனா். மேலும், மாவட்ட ஆட்சியா் அனுமதி பெற்று சிலையை அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடிகர் சித்தார்த்தின் 40 வது படம்!

காதலி இறந்த சோகத்தில் சீரியல் நடிகர் தற்கொலை!

ஸ்வாதி மாலிவால் விவகாரம்: பிபவ் குமார் கைது!

ஸ்வாதி மாலிவால் விவகாரம்: புதிய சிசிடிவி காட்சிகள் வெளியீடு

தமிழகத்தில் 100 நாள் வேலை திட்ட ஊதியம் உயர்வு!

SCROLL FOR NEXT