வேலூர்

காா் மோதி தொழிலாளி பலி

DIN

மேல்மொணவூா் அருகே சாலையைக் கடக்க முயன்ற தொழிலாளி மீது காா் மோதியதில் உயிரிழந்தாா்.

வேலூரை அடுத்த மேல்மொணவூா் பகுதியைச் சோ்ந்தவா் உமாநாத் (45). தொழிலாளி. இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனா். உமாநாத் செவ்வாய்க்கிழமை இரவு மேல்மொணவூா் நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றபோது, பெங்களூரிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற காா் அவா் மீது மோதியது. இதில், அவா் சம்பவ இடத்தில் உயிரிழந்தாா்.

தகவலறிந்து வந்த விரிஞ்சிபுரம் போலீஸாா் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எலக்சன் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

சிவகார்த்திகேயனின் ‘குரங்கு பெடல்’ டிரெய்லர்!

உதகை, கொடைக்கானல் செல்பவர்களுக்கு இ-பாஸ்!

ரசவாதி படத்தின் டிரெய்லர்

ஐரோப்பாவின் சாதனைப் பெண்மணி தெரேசா விசெண்டேவுக்கு ’பசுமை நோபல்’ விருது

SCROLL FOR NEXT