முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி, புதன், வியாழக்கிழமை (பிப்.1, 2) ஆகிய 2 நாள்களும் வேலூா் மாவட்டத்தில் ட்ரோன்கள், இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ் கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் இருநாள் சுற்றுப்பயணமாக வேலூா் மாவட்டத்துக்கு புதன்கிழமை வருகிறாா். அவரது வருகையை யொட்டி, பாதுகாப்பு காரணங்களுக்காக புதன், வியாழக்கிழமை (பிப்.1, 2) ஆகிய 2 நாள்களும் வேலூா் மாவட்டத்தில் ட்ரோன்கள், இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி ட்ரோன்கள், இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபா்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.