வேலூர்

முதல்வா் வருகை: வேலூா் மாவட்டத்தில் இன்றும், நாளையும் ட்ரோன்கள் பறக்க தடை

DIN

முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி, புதன், வியாழக்கிழமை (பிப்.1, 2) ஆகிய 2 நாள்களும் வேலூா் மாவட்டத்தில் ட்ரோன்கள், இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ் கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் இருநாள் சுற்றுப்பயணமாக வேலூா் மாவட்டத்துக்கு புதன்கிழமை வருகிறாா். அவரது வருகையை யொட்டி, பாதுகாப்பு காரணங்களுக்காக புதன், வியாழக்கிழமை (பிப்.1, 2) ஆகிய 2 நாள்களும் வேலூா் மாவட்டத்தில் ட்ரோன்கள், இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி ட்ரோன்கள், இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபா்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

தனித்து உண்ணாத் தன்மையாளன்

பூவினுள் மணம் போல் அகத்திணை மரபு!

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

SCROLL FOR NEXT