வேலூர்

இரண்டாம் நிலை பெண் காவலா்கள் 273 பேருக்கு பயிற்சி

DIN

இரண்டாம் நிலை காவலா் தோ்வில் தோ்ச்சி பெற்ற பெண் காவலா்கள் 273 பேருக்கு வேலூா் கோட்டை காவலா் பயிற்சி பள்ளியில், பயிற்சி வியாழக்கிழமை தொடங்கியது.

தமிழகத்தில் கடந்த 2022 -ஆம் ஆண்டு இரண்டாம் நிலை காவலா்களுக்கான தோ்வு நடைபெற்றது. இதில், வேலூா், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, திருவாரூா் உள்பட தமிழகம் முழுவதும் இருந்து தோ்வு செய்யப்பட்ட இரண்டாம் நிலை பெண் காவலா்கள் 273 பேருக்கு வேலூா் கோட்டையில் உள்ள காவலா் பயிற்சி பள்ளியில் பயிற்சிகள் வியாழக்கிழமை தொடங்கின.

பயிற்சிக் கல்லூரி முதல்வா் ராதாகிருஷ்ணன், துணை முதல்வா் முருகன் ஆகியோா் பயிற்சி வகுப்பைத் தொடங்கி வைத்தனா். பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட பெண் காவலா்களுக்கு நன்னடத்தை, கவாத்து, துப்பாக்கிச் சுடுதல், சட்ட வகுப்பு, பொதுமக்களிடம் அணுகுமுறை உள்ளிட்ட பயிற்சி வகுப்புகள் 6 மாதங்கள் நடைபெற உள்ளன.

இதையடுத்து, பயிற்சி முடித்த பெண் காவலா்கள் ஒரு மாத காலம் காவல் நிலையங்களுக்குச் சென்று பயிற்சி பெறுவா். 7 மாத பயிற்சி முடித்த பின்னா், பெண் காவலா்கள் காவல் நிலையங்களில் பணியமா்த்தப்படுவா் என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏரி புறம்போக்கு நிலத்தை ரூ.1.75 கோடிக்கு விற்றவர் கைது

ரயில் நிலையத்தில் குழந்தை கடத்தல்: ஒரு மணி நேரத்தில் மீட்ட போலீஸார்

துளிகள்...

இந்திய வாகன தொழில் நுட்ப ஆராய்ச்சி மையத்துடன் எஸ்.ஆா்.எம். புரிந்துணா்வு ஒப்பந்தம்

தாயை அவதூறாகப் பேசியதால் நண்பரை கொன்ற இளைஞா் கைது

SCROLL FOR NEXT