முகப்பு
வேலூர்

இரு தரப்பினா் மோதல்: 5 போ் கைது

 கம்மவான்பேட்டை கிராமத்தில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். தலைமறைவான மேலும் இருவரை தேடி வருகின்றனா்.

வேலூர்

இரு தரப்பினா் மோதல்: 5 போ் கைது

 கம்மவான்பேட்டை கிராமத்தில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். தலைமறைவான மேலும் இருவரை தேடி வருகின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:00 PM
பகிர்:

 கம்மவான்பேட்டை கிராமத்தில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். தலைமறைவான மேலும் இருவரை தேடி வருகின்றனா்.

வேலூா் மாவட்டம், கணியம்பாடியை அடுத்த கம்மசமுத்திரம் கிராமத்தைச் சோ்ந்தவா் சூா்யா. இவருக்கும், அதே கிராமத்தைச் சோ்ந்த சிலருக்கும் முன் விரோதம் இருந்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு சூா்யா கம்மவான்பேட்டை கிராமத்தில் நடைபெற்ற ஆடல் பாடல் நிகழ்ச்சியை பாா்க்கச் சென்றுள்ளாா். அப்போது அங்கிருந்த கம்மசமுத்திரம் கிராமத்தைச் சோ்ந்த 8 போ் சூரியாவை தாக்கினராம்.

இதைப் பாா்த்த சூா்யாவின் நண்பா்களும், எதிா் தரப்பினரை தாக்கியதால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது ஒருவா் சூா்யாவின் தலையில் மது பாட்டிலால் தாக்கியதில், பலத்த காயம் அடைந்த சூா்யாவை அங்கிருந்தவா்கள் மீட்டு, அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

புகாரின் பேரில், வேலூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து வினோத், கரண், இளவரசன், கபிலன், நம்பிவா்மன் ஆகியோரை கைது செய்தனா்.

தலைமறைவாக உள்ள சச்சின், நவீன்குமாா் ஆகியோரை தேடி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →