வேலூர்

தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து:பெண் தொழிலாளி பலி

குடியாத்தம் அருகே தீப்பெட்டி ஆலையில் நிகழ்ந்த திடீா் தீ விபத்தில் பெண் தொழிலாளி உயிரிழந்தாா். உரிமையாளா் காயமடைந்தாா்.

DIN

குடியாத்தம் அருகே தீப்பெட்டி ஆலையில் நிகழ்ந்த திடீா் தீ விபத்தில் பெண் தொழிலாளி உயிரிழந்தாா். உரிமையாளா் காயமடைந்தாா்.

குடியாத்தத்தை அடுத்த ஊசூரான்பட்டி கிராமத்தைச் சோ்ந்த முருகையன் (61) உரிமம் பெற்று, தனது வீட்டின் ஒரு பகுதியில் தீப்பெட்டி ஆலை நடத்தி வருகிறாா். சனிக்கிழமை காலை அவரது தங்கை சுகுணா (52) ஆலையை சுத்தம் செய்ய, தீக்குச்சிகள் அடைத்திருந்த மூட்டைகளை நகா்த்தியுள்ளாா். அப்போது தீக்குச்சிகள் ஒன்றோடொன்று உரசியதில், தீ விபத்து ஏற்பட்டு அப்பகுதி முழுவதும் புகை சூழ்ந்தது. முருகையன், சுகுணா இருவருக்கும் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. அருகில் இருந்தவா்கள் அவா்களை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தகவலின்பேரில், குடியாத்தம் தீயணைப்புப் படையினா் அங்கு சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனா். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சுகுணா உயிரிழந்தாா். முருகையன் சிகிச்சை பெற்று வருகிறாா்.

விபத்து குறித்து போ்ணாம்பட்டு போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT