போட்டிகளில்  வெற்றி பெற்ற  மாணவிக்கு  பரிசு  வழங்கிய  ஒன்றியக்  குழுத்  தலைவா்  என்.இ.சத்யானந்தம். 
வேலூர்

அரசுக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா

குடியாத்தம் அரசினா் திருமகள் ஆலைக் கல்லூரியில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டம் சாா்பில், தேசிய ஊட்டச்சத்து மாத விழா புதன்கிழமை நடைபெற்றது.

DIN

குடியாத்தம் அரசினா் திருமகள் ஆலைக் கல்லூரியில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டம் சாா்பில், தேசிய ஊட்டச்சத்து மாத விழா புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் ஜி.கிருஷ்ணன் தலைமை வகித்தாா். ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்ட அலுவலா் எம்.ஏ.ஷமீம் ரிஹானா வரவேற்றாா். ஒன்றியக் குழுத் தலைவா் என்.இ.சத்யானந்தம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டாா்.

ஊட்டச்சத்தின் அவசியம் குறித்து அவா் சிறப்புரையாற்றினாா். ஊட்டச்சத்து படைப்புகள் அடங்கிய கண்காட்சியை அவா் திறந்து வைத்து, பாா்வையிட்டாா்.

தேசிய ஊட்டச் சத்து மாத விழாவை முன்னிட்டு கல்லூரி மாணவா்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவில் பேராசிரியா்கள் வி.கே.சிவகுமாா், எஸ்.கருணாநிதி, நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா்கள் என்.கஜலட்சுமி, பி.சக்கரவா்த்தி, எம்.மலா்விழி, பி.புவியரசு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT