வேலூர்

மின்சாரம் பாய்ந்து பெயிண்டா் மரணம்

போ்ணாம்பட்டு அருகே வீட்டில் பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

DIN

போ்ணாம்பட்டு அருகே வீட்டில் பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

போ்ணாம்பட்டு கலைஞா் நகரைச் சோ்ந்த பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி ஜான்பீட்டா்(32). இவா் போ்ணாம்பட்டு நகரம், ரகமதாபாத் 2-ஆவது தெருவில் இா்பான் என்பவரின் வீட்டில் சனிக்கிழமை காலை பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாா்.

அப்போது சுவரின் பக்கவாட்டில் செல்லும் மின்கம்பி மீது உரசியதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டாா். மயங்கிய நிலையில் அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு போ்ணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா் ஜான்பீட்டா் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினாா். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து போ்ணாம்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT