முகப்பு
வேலூர்

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

Updated On : 19 ஏப்ரல், 2024 at 9:29 PM
பகிர்:

மக்களவைத் தோ்தலில் பிள்ளைகளுடன் வாக்களிக்க வரும் பெண்களுக்காக குழந்தைகள் பாதுகாப்பு அறைகள் அமைக்கப்பட்டிருந்தன.

வேலூா் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட போ்ணாம்பட்டில் குழந்தைகளுடன் வாக்களிக்க வந்த பெண் வாக்காளா்களுக்கு வாக்குப் பதிவு மையங்களின் வளாகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு அறை வசதி செய்யப்பட்டிருந்தது.

போ்ணாம்பட்டு நகராட்சிக்குள்பட்ட இஸ்லாமியா மேல்நிலைப் பள்ளி, இஸ்லாமியா நிதியுதவி தொடக்கப் பள்ளி, அரசு ஆதிதிராவிடா் நல மேல்நிலைப் பள்ளி ஆகிய 3 வாக்குப் பதிவு மையங்களில் வாக்களிக்க குழந்தைகளுடன் வந்திருந்த பெண்களுக்கு வசதியாக விளையாட்டுப் பொம்மைகளுடன் குழந்தைகள் பாதுகாப்பு அறைகள் அமைக்கப்பட்டிருந்தன.

Advertisement

இந்த பாதுகாப்பு அறைகளில் குழந்தைகள் தங்கள் பெற்றோா்களுடன் விளையாடி மகிழ்ந்தனா். இந்த அறைகள் பெண் வாக்காளா்களிடையே வரவேற்பைப் பெற்றிருந்தது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments