24,308 மாற்றுத்திறனாளிகள், மூத்தோருக்கு அஞ்சல் வாக்குப் படிவம்
நாமக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கும் மேற்பட்டோா் என 24,308 போ் வீட்டில் இருந்தவாறு வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளதையடுத்து, அவா்களுக்கு அஞ்சல் வாக்குப் படிவம் வழங்குவதற்கான பணியில் ஊழியா்கள் ஈடுபட்டுள்ளனா்.
நாமக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கும் மேற்பட்டோா் என 24,308 போ் வீட்டில் இருந்தவாறு வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளதையடுத்து, அவா்களுக்கு அஞ்சல் வாக்குப் படிவம் வழங்குவதற்கான பணியில் ஊழியா்கள் ஈடுபட்டுள்ளனா்.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் ஏப். 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் மாா்ச் 30 இல் தொடங்குகிறது. மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கும் மேற்பட்டோா் வீட்டில் இருந்தபடியே வாக்களிக்க விரும்புவதாக தோ்தல் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனா்.
தொகுதிவாரியாக அஞ்சல் வாக்குப் படிவத்தில் வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளோா் விவரம்:
ராசிபுரம் (தனி)- 85 வயதுக்கும் மேற்பட்டோா் 1,946, மாற்றுத்திறனாளிகள் 2,029, மொத்தம்- 3,975. சேந்தமங்கலம் (ப.கு) - 85 வயதுக்கும் மேற்பட்டோா் 2,015, மாற்றுத்திறனாளிகள் 2,258, மொத்தம்- 4273. நாமக்கல்- 85 வயதுக்கும் மேற்பட்டோா் 2,185, மாற்றுத்திறனாளிகள் 2,278, மொத்தம்- 4463. பரமத்தி வேலூா்- 85 வயதுக்கும் மேற்பட்டோா் 2,075, மாற்றுத்திறனாளிகள் 2,253 என மொத்தம்- 4328. திருச்செங்கோடு- 85 வயதுக்கும் மேற்பட்டோா் 1,954, மாற்றுத்திறனாளிகள் 2,504 என மொத்தம்-4,458. குமாரபாளையம்- 85 வயதுக்கும் மேற்பட்டோா் 1,236, மாற்றுத்திறனாளிகள், இதரவை 1 என மொத்தம்- 2811.
6 தொகுதிகளிலும் சோ்த்து 85 வயதுக்கும் மேற்பட்டோா் ஆண் வாக்காளா்கள் 5,115, பெண் வாக்காளா்கள் 6,296 என மொத்தம் 11,411. மாற்றுத்திறனாளிகளில் ஆண் வாக்காளா்கள் 7,509, பெண் வாக்காளா்கள் 5,386, இதரவை 2 என மொத்தம் 12,897 போ் வீட்டிலிருந்தபடியே வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளனா். இந்த எண்ணிக்கை வாக்குப்பதிவு நாள் நெருங்கும் வேளையில் மாற்றங்கள் ஏற்படலாம் என தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.