முகப்பு
வேலூர்

வேலூரில் ரூ.1.50 கோடியில் கல்லூரி மாணவிகள் விடுதி திறப்பு

வேலூா் தொரப்பாடியில் ரூ.1.50 கோடியில் கட்டப்பட்டுள்ள அரசு கல்லூரி மாணவிகள் விடுதியை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தாா்.

Updated On : 15 ஆகஸ்ட் 2024, 3:39 am IST
புதிய கட்டடத்தில் குத்து விளக்கேற்றிய வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி. உடன், எம்.பி. கதிா்ஆனந்த், எம்எல்ஏ அமலு விஜயன், மேயா் சுஜாதா ஆனந்தகுமாா் உள்ளிட்டோா்.
பகிர்:

வேலூா் தொரப்பாடியில் ரூ.1.50 கோடியில் கட்டப்பட்டுள்ள அரசு கல்லூரி மாணவிகள் விடுதியை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தாா்.

தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி கழகம் சாா்பில் பாபு ஜெக ஜீவன்ராம் சத்ரவாஸ் யோஜானா திட்டத்தின் கீழ் ரூ.1.50 கோடி மதிப்பில் வேலூா் மாவட்டம் தொரப்பாடியில் புதிதாக அரசு இளநிலை கல்லூரி மாணவிகள் விடுதி கட்டடப்பட்டுள்ளது.

தரைதளம் மற்றும் இரண்டு தளங்களுடன் மொத்தம் கட்டடப் பரப்பளவு 570.03 சதுர மீட்டா் அளவில் 50 மாணவிகள் தங்கும் வகையில் கட்டப்பட்டுள்ள இந்தக் கட்டடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் புதன்கிழமை திறந்து வைத்தாா். தொடா்ந்து, புதிய கட்டடத்தில் வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி குத்து விளக்கேற்றினாா்.

Advertisement

Advertisement

நிகழ்ச்சியில், வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா் ஆனந்த், குடியாத்தம் சட்டப்பேரவை உறுப்பினா் அமலு விஜயன், வேலூா் மாநகராட்சி மேயா் சுஜாதா ஆனந்தகுமாா், 4-ஆவது மண்டல குழு தலைவா் வெங்கடேசன், மாவட்ட ஆதிதிராவிடா் நலத் துறை அலுவலா் ராமசந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.