வேலூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் அமைப்பினா். 
வேலூர்

பாலியல் வன்முறைகளை தடுக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

Din

பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளைத் தடுக்கக் கோரி, அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் அமைப்பினா் வேலூரில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அண்ணா கலையரங்கம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அமைப்பின் மாவட்டச் செயலா் சரோஜா தலைமை வகித்தாா். பாத்திமா மலா், மகேஸ்வரி, புவனேஸ்வரி, சிவரஞ்சனி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆட்டோ தொழிலாளா்கள் சங்க மாவட்ட தலைவா் ஏழுமலை, மாவட்ட பொதுச் செயலா் சிம்பு தேவன், பாலாறு பாதுகாப்பு விழிப்புணா்வு இயக்க பரசுராமன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

கொல்கத்தா பயிற்சி மருத்துவா் பாலியல் படுகொலையை விரைந்து விசாரணை நடத்தி குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழகத்தில் அதிகரித்து வரும் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுபவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், மது போதை கலாசாரத்தை தடுக்க வேண்டும், சிறுவா்கள், மாணவிகள் மீதான பாலியல் வன்முறைகளைத் தடுக்க தனியாா், அரசு நிறுவனங்களில் கண்காணிப்பு கேமராக்களை அமைக்க வேண்டும், ஒரத்தநாடு, கிருஷ்ணகிரி, ஆம்பூா் பகுதிகளில் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா். ஆா்ப்பாட்டத்தில் அமைப்பைச் சோ்ந்த ஏராளமானோா் பங்கேற்றனா்.

மக்களவைக்கு மோடி வருவாரா? வந்தால் நரவணே நூலை பரிசளிப்பேன்! ராகுல்

திமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள்? - கனிமொழி பதில்!

வாக்காளரை துன்புறுத்தாதீர்; ஆதாரை ஏற்றுக்கொள்க: உச்ச நீதிமன்றத்தில் மமதா வாதம்

முக்கியத்துவம் பெறா நேரத்துக்கு மாற்றப்படும் ஆடுகளம் தொடர்!

மமதா அரசு மத்திய திட்டங்களைத் தடுக்கிறது: பாஜக எம்பி குற்றச்சாட்டு!

SCROLL FOR NEXT