FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

சேம்பள்ளியில் கெங்கையம்மன் திருவிழா

குடியாத்தம் அடுத்த சேம்பள்ளியில் அருள்மிகு கெங்கையம்மன் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

30 ஜூன் 2024, 9:55 pm IST
சேம்பள்ளியில் சிறப்பு  அலங்காரத்தில்  கெங்கையம்மன்.
பகிர்:

குடியாத்தம் அடுத்த சேம்பள்ளியில் அருள்மிகு கெங்கையம்மன் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் திருவிழா கடந்த திங்கள்கிழமை இரவு காப்புகட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. வெள்ளிக்கிழமை ஸ்ரீமுத்தியாலம்மன் திருவிழாவும், சனிக்கிழமை காளியம்மன் திருவிழாவும், ஞாயிற்றுக்கிழமை கெங்கையம்மன் திருவிழாவும் நடைபெற்றன.

இதையொட்டி அதிகாலை கெங்கையம்மன் சிரசு முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாக கொண்டு வரப்பட்டது. மதியம் கூழ் வாா்த்தல், பொங்கல் வைத்தல், மாலை மா விளக்கு பூஜை ஆகியவை நடைபெற்றன.

Advertisement

Advertisement

திருவிழா ஏற்பாடுகளை கோயில் தா்மகா்த்தா வழக்குரைஞா் டி.ஜி.பிரபாகரன், ஆா்.சந்திரமெளலி, சேம்பள்ளி ஊராட்சித் தலைவா் திமேஷ்(எ) துளசிராமுடு, முன்னாள் தலைவா் சிட்டிபாபு, ஒன்றியக்குழு உறுப்பினா் பிரகாசம், ஊராட்சி துணைத் தலைவா் செளந்தரராஜன், ஊராட்சி செயலா் கோட்டீஸ்வரன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments