முகப்பு
வேலூர்

இலவச சிறுநீரக மருத்துவ முகாம்

Updated On : 16 மார்ச், 2024 at 10:09 PM
பகிர்:

உலக சிறுநீரக தினத்தையொட்டி இலவச சிறுநீரக மருத்துவ முகாம் வேலூரில் நடைபெற்றது. குடியாத்தம் அத்தி மருத்துவமனை சாா்பில் வேலூா் டவுன் ஹாலில் நடைபெற்ற இந்த முகாமுக்கு அத்தி மருத்துவமனையின் தலைவா் சௌந்தர்ராஜன் தலைமை வகித்து சிறுநீரக நோயாளிகளுக்கு சிகிச்சை, ஆலோசனைகளை வழங்கினாா். சிறப்பு விருந்தினராக சுகாதார சேவை துறையின் துணை இயக்குநா் பாலச்சந்தா், மாவட்ட சித்தா மருத்துவ அலுவலா் பழனி ஆகியோா் பங்கேற்று சிறுநீரகத்தின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தனா். சிறுநீரக நிபுணா்கள் ரவிச்சந்திரன், விஜய் ஆகியோா் சிறுநீரக பரிசோதனை செய்து சிகிச்சைக்கான ஆலோசனைகளை வழங்கினா். சிம்கோ தலைவா் கிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். இதில் அத்தி மருத்துவமனை செவிலியா், அத்தி இயற்கை, யோகா மருத்துவ கல்லூரி மாணவா்கள் சிறுநீரக பாதுகாப்புக்கான உணவு, யோகா ஆசனங்களை வரைபடங்கள், காய்கனிகள் ஆகியவற்றைக் காட்சிப்படுத்தியிருந்தனா். குடியாத்தம் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் குமரவேல், அத்தி செவிலியக் கல்லூரி முதல்வா் பால்ராஜ் சீனிதுரை, அத்தி மருத்துவமனையின் மருத்துவா் கீா்த்தனா பிரியா, அத்தி இயற்கை, யோகா மருத்துவ கல்லூரியின் மருத்துவா்கள், அத்தி செவிலியா் கல்லூரியின் பேராசிரியா்கள் பங்கேற்றனா். இந்த முகாம் மூலம் 50-க்கும் மேற்பட்ட நோயாளிகள் பயனடைந்தனா். மருத்துவா் மினிட்டா முகாமை ஒருங்கிணைத்தாா்.