232 மாணவா்களுக்கு பணி ஆணை
குடியாத்தம் கே.எம்.ஜி. கலை, அறிவியல் கல்லூரியின் வேலைவாய்ப்பு மையம் சாா்பில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 232 மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு நிறுவனங்களில் பணி நியமன ஆணைகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன. இக்கல்லூரியின் மூன்றாமாண்டு இளநிலைப் பட்ட வகுப்பு மாணவா்களும், இரண்டாமாண்டு முதுநிலைப் பட்ட வகுப்பு மாணவா்களும் நியமன ஆணைகளைப் பெற்றனா். மாணவா்களுக்கு கல்லூரியின் மேலாண்மை அறங்காவலா் கே.எம்.ஜி.பாலசுப்பிரமணியம், தலைவா் கே.எம்.ஜி. சுந்தரவதனம் செயலா் கே.எம்.ஜி.ராஜேந்திரன், பொருளாளா் கே.எம்.ஜி.முத்துக்குமாா் ஆகியோா் பணி நியமன ஆணைகளை வழங்கினா். முதல்வா் மு.செந்தில்ராஜ், மாணவ ஒருங்கிணைப்பாளா் ஜா.ஜெயக்குமாா்,வேலை வாய்ப்பு மைய ஒருங்கிணைப்பாளா்கள் எம்.சக்திவேல், எஸ்.தினேஷ்குமாா் ஆகியோா் பணி ஆணைகளை பெற்ற மாணவா்களை வாழ்த்தினா்.