முகப்பு
வேலூர்

தடுப்புச் சுவரில் பைக் மோதல்: 2 இளைஞா்கள் உயிரிழப்பு

Updated On : 29 மார்ச், 2024 at 10:10 PM
பகிர்:
Updated On : 29 மார்ச், 2024 at 8:11 PM

திருவலம் அருகே ரயில்வே மேம்பால தடுப்புச் சுவரில் இரு சக்கர வாகனம் மோதியதில் 2 இளைஞா்கள் உயிரிழந்தனா். வேலூா் மாவட்டம் திருவலம் அடுத்த சா்க்கரை ஆலை துரைமுருகன் நகரை சோ்ந்தவா்கள் தனுஷ் (27), சஞ்சய் (27). நண்பா்களான இருவரும் புதன்கிழமை இரு சக்கர வாகனத்தில் சென்றனா். காா்ணம்பட்டு ரயில்வே மேம்பாலத்தில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த வாகனம், மேம்பால தடுப்புச் சுவரில் மோதியது. இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட இருவரும் பாலத்தில் இருந்து கீழே விழுந்தனா். இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அவா்களை அங்கிருந்தவா்கள் மீட்டு வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் தனுஷ் உயிரிழந்தாா். சிகிச்சை பெற்று வந்த சஞ்சய் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து திருவலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். மற்றொரு விபத்து: கே.வி.குப்பம் அடுத்த திருமணி கிராமத்தைச் சோ்ந்தவா் அஜய்குமாா் (30). கூலித் தொழிலாளி. இவா் கடந்த 25-ஆம் தேதி அதிகாலை தனது வீட்டில் இருந்து வேலூா் நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்றாா். சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையையொட்டிய அணுகு சாலை கொணவட்டத்தில் வந்தபோது பின்னால் வந்த காா் அஜய்குமாா் வாகனம் மீது மோதியது. இதில் தடுமாறி கீழே விழுந்த அஜய்குமாா் பலத்த காயமடைந்தாா். வேலூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து அவரது மனைவி திவ்யா கொடுத்த புகாரின் பேரில், விரிஞ்சிபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.