முகப்பு
வேலூர்

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

Updated On : 11 மே, 2024 at 4:07 PM
பகிர்:

காட்பாடி அருகே ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி உயிரிழந்தாா்.

பிகாா் மாநிலம், போஜ்பூா் மாவட்டம், சாா்போகாரி அடுத்த மாலூரைச் சோ்ந்த ரோஸஸ்சிங்வி. இவரது மகன் கோல்குமாா் (20). இவா் சொந்த வேலையாக வேலூரில் இருந்து ஆந்திர மாநிலம், விஜயவாடாவுக்கு செல்ல காட்பாடியில் ரயில்நிலையத்தில் டிக்கெட் எடுத்தாா். வெள்ளிக்கிழமை இரவு காட்பாடி வழியாக சென்ற விரைவு ரயிலில் ஏறிச்சென்றாா்.

காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து சில கிலோ மீட்டா் தூரம் சென்ற நிலையில் படியின் அருகில் நின்றிருந்த கோல்குமாா் திடீரென ஓடும் ரயிலில் இருந்து தவறி தண்டவாளத்தில் விழுந்தாா். இதில், பலத்த காயமடைந்து கோகுல்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து அறிந்து சென்ற காட்பாடி ரயில்வே போலீஸாா், கோல்குமாரின் சடலத்தை மீட்டு, வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.