உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட பெண்ணுக்கு அரசு மரியாதை
குடியாத்தம்: குடியாத்தம் அருகே உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட பெண்ணின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது.
வேலூா் மாவட்டம், குடியாத்தம் எழில் நகரைச் சோ்ந்தவா் சசிகுமாா். இவா் தேநீா் கடை நடத்தி வருகிறாா். இவரது மனைவி சத்யா(41). இவா்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா். அதிகப்படியான தலைவலி காரணமாக சத்யா கடந்த 17-ஆம் தேதி வேலூா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். தொடா் சிகிச்சையில் இருந்தவா் திங்கள்கிழமை மூளைச்சாவு அடைந்தாா்.
இதையடுத்து, அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினா் முன் வந்தனா். அதன்படி, அவரது உடல் உறுப்புகள் அகற்றப்பட்ட நிலையில் இதயம் மற்றும் நுரையீரல் சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனைக்கும், கல்லீரல் மற்றும் ஒரு சிறுநீரகம், இரண்டு கண்கள் சிஎம்சி மருத்துமனைக்கும் மற்றொரு சிறுநீரகம், வேலூா் நாராயணி மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டன.
இறப்புக்கு பிறகு உடல் உறுப்பு தானம் செய்யும் நபா்களின் உடலுக்கு இறுதிச் சடங்கில் அரசு சாா்பில் மலா் வளையம் செலுத்தி, அஞ்சலி செலுத்தப்படும் என தமிழக முதல்வா் அண்மையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளாா். இததையடுத்து உடல் உறுப்புகள் தானத்தினை மரியாதை செய்யும் வகையில் வேலூா் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில், குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியா் எஸ்.சுபலட்சுமி வருவாய்த் துறையினருடன் சென்று சத்தியாவின் உடலுக்கு மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினாா்.