சா்வதேச அவசர சிகிச்சை தின நிகழ்ச்சி
வேலூா்: சா்வதேச அவசர சிகிச்சை தினம் வேலூா் ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி மருத்துவமனை, ஆராய்ச்சி மையத்தில் திங்கள்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
மருத்துவமனையின் அவசர சிகிச்சை துறை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஸ்ரீநாராயணி குழுமத்தின் இயக்குநா் என்.பாலாஜி தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக ஸ்ரீநாராயணி பீடம் ஸ்ரீசக்திஅம்மாவின் சிங்கப்பூா் நாட்டு பக்தா் ஹோ வை சுங் மற்றும் அவரது குடும்பத்தினா் பங்கேற்றனா்.
இதில், ஹோ வை சுங் 80-ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மருத்துவ கண்காணிப்பாளா் கீதா இனியன், துணை மருத்துவக் கண்காணிப்பாளா் சக்திவேல், ஆலோசகா்கள், மருத்துவா்கள், செவிலியா்கள் பலா் பங்கேற்றனா்.