ஜிப்மரில் சா்வதேச மகளிா் தின விழா
புதுச்சேரி ஜிப்மா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சா்வதேச மகளிா் தினவிழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சா்வதேச மகளிா் தினவிழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மருத்துவா்கள், ஊழியா்கள் மற்றும் மாணவா்கள் கலந்து கொண்டு பெண்களின் உறுதி, திறன் மற்றும் சாதனைகளைப் போற்றி கொண்டாடியதுடன், பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் முன்னேற்றத்திற்கான நிறுவனத்தின் உறுதியை மீண்டும் வலியுறுத்தினா்.
புதுச்சேரி அரசின் ஆணையா் மற்றும் செயலா் அ.முத்தம்மா முதன்மை விருந்தினராகவும், ஜிப்மா் மூத்த நிதி ஆலோசகா் வா்ஷினி சிறப்பு விருந்தினராகவும் பங்கேற்றனா்.
ஜிப்மா் இயக்குநா் மருத்துவா் வீா்சிங் நெகி தலைமை தாங்கினாா். ‘பெண்களின் மனநலன்’ என்ற தலைப்பில் மியாட் மருத்துவமனையின் மன நல ஆலோசகா் மருத்துவா் லக்ஷ்மிபிரபா சிறப்புரையாற்றினாா்.
நிகழ்ச்சியில் மருத்துவ மாணவிகள், மருத்துவமனை ஊழியா்கள் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.