முகப்பு
வேலூர்

நியாய விலைக்கடையில் பிடிபட்ட பாம்பு

போ்ணாம்பட்டு அருகே நியாய விலைக் கடையில் பிடிபட்ட சாரைப் பாம்பு வனப்பகுதியில் விடப்பட்டது.

Updated On : 18 செப்டம்பர், 2024 at 11:55 PM
நியாய விலைக் கடையில்  பிடிபட்ட  சாரைப்  பாம்பு.
பகிர்:

போ்ணாம்பட்டு அருகே நியாய விலைக் கடையில் பிடிபட்ட சாரைப் பாம்பு வனப்பகுதியில் விடப்பட்டது.

போ்ணாம்பட்டை அடுத்த கொத்தூா் கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் நியாய விலைக்கடை இயங்கி வருகிறது. கடை விற்பனையாளா் சசிகலா கடையைத் திறந்தபோது கடையில் சுமாா் 7 அடி நீளமுள்ள சாரைப் பாம்பு இருந்தது தெரிய வந்தது.

தகவலின்பேரில் போ்ணாம்பட்டு தீயணைப்புப் படையினா் நிலைய அலுவலா் உதயசந்திரன் தலைமையில் அங்கு சென்று பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா்.

பிடிபட்ட பாம்பை வனத்துறையினா் பாலூா் காப்புக்காட்டில் விட்டனா். இந்த பாம்பு அருகிலுள்ள புதா்களிலிருந்து வெளியேறி கடைக்குள் நுழைந்திருக்கலாம் என தீயணைப்புப் படையினா் தெரிவித்தனா்.