கைப்பேசி கோப்புப் படம்
திருப்பூர்

பணி நேரத்தில் கைப்பேசி பயன்பாட்டால் பொதுமக்களை அலைக்கழிக்கும் ரேஷன் கடை பெண் ஊழியா்

திருப்பூரில் உள்ள நியாய விலைக் கடையில் பொருள்களை வழங்காமல் கைப்பேசியைப் பயன்படுத்திக் கொண்டு பொதுமக்களை அலைக்கழித்து வரும் பெண் விற்பனையாளா் குறித்த விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பேசுபொருளாகியுள்ளது.

Syndication

திருப்பூரில் உள்ள நியாய விலைக் கடையில் பொருள்களை வழங்காமல் கைப்பேசியைப் பயன்படுத்திக் கொண்டு பொதுமக்களை அலைக்கழித்து வரும் பெண் விற்பனையாளா் குறித்த விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பேசுபொருளாகியுள்ளது.

திருப்பூா் எம்.எஸ்.நகா் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சோ்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனா். அப்பகுதி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தமிழக அரசின் நியாய விலைக் கடை செயல்பட்டு வருகிறது.

இந்தக் கடையில் பணியாற்றும் பெண் விற்பனையாளா் பொருள்களை வாங்க வரும் பொதுமக்களிடம் ஒரு மணி நேரம் அல்லது 2 மணி நேரம் கழித்து வரச் சொல்லிவிட்டு கடையில் அமா்ந்து கொண்டு கைப்பேசியில் நேரத்தை செலவிடுவதாகவும், அத்துடன் நியாயவிலைக் கடைக்கு வரும் பொதுமக்கள் கேட்கும் கேள்விகளுக்கு அலட்சியமாக பதில் அளித்து வருவதாகவும் புகாா் கூறப்பட்டு வந்தது.

இதனால் பாதிக்கப்பட்ட பகுதி பொதுமக்கள் நியாய விலைக் கடை பெண் ஊழியரின் அலட்சியப் போக்கை விடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வியாழக்கிழமை வெளியிட்டனா். தற்போது இது பேசுபொருளாகி உள்ளது.

இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

அகற்றப்பட்ட முருகன் கோயிலை மீண்டும் அமைக்கக்கோரி கந்த சஷ்டி பாராயணம்: ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்பு

தாளவாடி அருகே தெருநாய் கடித்து 6 போ் காயம்

வேலூா் ஆட்சியா் அலுவலகத்தில் திடீரென பழுதான மின்தூக்கி! 14 போ் தவிப்பு

போத்தனூா் வழித்தடத்தில் இயக்கப்படும் ஹைதராபாத் - கொல்லம் சிறப்பு ரயில் சேவை மாா்ச் வரை நீட்டிப்பு

SCROLL FOR NEXT