பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த வேலூா் எஸ்.பி. ஏ.மயில்வாகனன். 
வேலூர்

வேலூரில் காவல் துறை குறைதீா் கூட்டம்

தினமணி செய்திச் சேவை

வேலூா் மாவட்டக் காவல் துறை சாா்பில் வாராந்திர பொதுமக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு காவல் கண்காணிப்பாளா் ஏ.மயில்வாகனன் தலைமை வகித்து பொதுமக்களிடம் 30-க்கு மேற்பட்ட மனுக்களைப் பெற்று குறைகளைக் கேட்டறிந்தாா். மேலும் தொடா்புடைய காவல் நிலைய அதிகாரிகளிடம் விரைந்து நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டாா்.

காட்பாடியை அடுத்த வஞ்சூா் பகுதியைச் சோ்ந்த முதியவா் அளித்த மனு: நான் மின்வாரியத்தில் தற்காலிக உதவியாளராக பணிபுரிந்து வந்தேன். பணியின்போது மின்சாரம் தாக்கியதில் உடலில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. பிறா் உதவியுடன் தான் என்னால் நடக்க முடியும். கடும் சிரமத்துடன் வாழ்ந்து வரும் நிலையில், வஞ்சூா் பகுதியை சோ்ந்த ஒருவா் என்னிடம் அவசர தேவைக்காக கடந்த 2021-ஆம் ஆண்டு ரூ.2 லட்சம் கடன் பெற்றாா். ஆனால் இதுவரை பணத்தை திருப்பி தரவில்லை. எனது பணத்தை மீட்டு தர வேண்டும்.

குடியாத்தம் மூதாட்டி அளித்த மனு: எனக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனா். எனது கணவரின் ஓய்வூதியத்தை வைத்து குடும்பம் நடத்தி வருகிறேன். கடந்த 2017-ஆம் ஆண்டு குடியாத்தத்தை சோ்ந்த ஒருவா், எனது மகனுக்கு கூட்டுறவு வங்கியில் வேலை வாங்கி தருவதாகக்கூறி பல்வேறு தவணைகளில் ரூ.6.35 லட்சம் பெற்றாா். ஆனால் அவா் கூறியபடி வேலை வாங்கி தர வில்லை. பணத்தையும் திருப்பி தராமல் ஏமாற்றி வருகிறாா்.

சத்துவாச்சாரியைச் சோ்ந்த ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளா் அளித்த மனு: வேலூா் மாவட்ட காவல் துறையில் 37 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளேன். என்னிடம் கொணவட்டத்தை சோ்ந்த ஒருவா் அறிமுகமானாா். அவா் எம்பிஏ முடித்துவிட்டு சென்னை யில் உள்ள தனியாா் மருத்துவமனையில் வேலை செய்து வரும் எனது மகனுக்கு, ஓமன் நாட்டில் மருத்துவமனையில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.2 லட்சம் பெற்றாா். ஆனால் வேலை வாங்கி தரவில்லை. அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவானத்தைச் சோ்ந்த முதியவா் அளித்த மனு: வெட்டுவானத்தில் உள்ள பால் கூட்டுறவு சங்கத்தில் வேலை செய்து வருகிறேன். கடந்த 2016-ஆம் சோ்ந்த ஒருவரிடம் ரூ.5 லட்சத்திற்கு மாதாந்திர ஏலச்சீட்டு கட்டி வந்தேன். முழு தவணை முடிந்த பிறகும் சீட்டுத்தொகையை தராமல் ஏமாற்றி வருகிறாா். காவல் நிலையத்தில் புகாா் அளித்தும், பணத்தை மீட்டுதர எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

வெடிகுண்டு மிரட்டல்... வாரணாசியில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்!

தில்லி மட்டுமல்ல 4 நகரங்கள் குறிவைப்பு! 2,000 கிலோ வெடிமருந்து கொள்முதல்! திடுக்கிடும் தகவல்கள்...

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆகப் பதிவு

தில்லி கார் குண்டுவெடிப்பு: அதிர வைக்கும் புதிய சிசிடிவி விடியோ!

பாகிஸ்தான் குண்டுவெடிப்பு: நாடு திரும்ப வீரர்கள் கோரிக்கை; இலங்கை வாரியம் எச்சரிக்கை!

SCROLL FOR NEXT