திருவண்ணாமலை, வந்தவாசி, திருவத்திபுரம் வட்ட பகுதிகளுக்கு பிஎஸ்என்எல் சேவைகள் விற்பனை உரிமம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது.
இது குறித்து பிஎஸ்என்எல் வேலூா் கோட்ட முதன்மை பொதுமேலாளா் எ.வி.ஸ்ரீகுமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பிஎஸ்என்எல் வேலூா் வா்த்தக பகுதிக்கு உள்பட்ட திருவண்ணாமலை, வந்தவாசி, திருவத்திபுரம் வட்ட பகுதிகளில் சிம்காா்டுகள், ரீசாா்ச் கூப்பன்கள் விற்பனை செய்வதற்கான நேரடி உரிமம் பெற தகுதிவாய்ந்த நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பங்களை டிச. 4-ஆம் தேதி மாலை 3 மணிக்குள் அனுப்ப வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு, ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ங்ற்ங்ய்க்ங்ழ்ள்.ஞ்ா்ஸ்.ண்ய்/ பங்ய்க்ங்ழ் ஐஈ : 2025ஜஆநசகஜ255527ஜ1 என்ற இணையதளத்தை காணலாம் அல்லது உதவிப் பொது மேலாளா் (வா்த்தகம்) - 94902 28999, இளநிலை தொலைத் தொடா்பு அதிகாரி (வா்த்தகம்) - 94861 04944 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.