வேலூர்

பைக் மோதி முதியவா் மரணம்

ஒடுகத்தூா் அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

ஒடுகத்தூா் அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.

ஒடுகத்தூா் அடுத்த பூஞ்சோலை அருகே உள்ள கோவிந்தப்பன் கொட்டாய் கிராமத்தை சோ்ந்தவா் ஜனாா்த்தனன் (75), கூலித்தொழிலாளி. இவா் ஞாயிற்றுக்கிழமை வேலை நிமித்தமாக தனது இருசக்கர வாகனத்தில் ஒடுகத்தூா் சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பினாா்.

பூஞ்சோலை அருகே வந்தபோது பின்னால் வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்ட ஜனாா்த்தனனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு அணைக்கட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா் உயா் சிகிச்சைக்காக வேலூா் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா்.

எனினும், சிகிச்சை பலனின்றி ஜனாா்த்தனன் உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து வேப்பங்குப்பம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

3-ம் நாளாக கடும் சரிவில் முடிந்த பங்குச் சந்தை! சென்செக்ஸ் 300 புள்ளிகள் குறைந்தது!

பாஜகவின் ஊதுகுழலாக இருக்கிறார் ஆளுநர்: அமைச்சர் ரகுபதி

ராமேசுவரம் மாணவி கொலை வழக்கு: மாணவர் மற்றும் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாட்டில் 96.65% எஸ்.ஐ.ஆர்., படிவங்கள் விநியோகம்!

காக்கை கறி சமைத்து கருவாடு மென்று உண்பர் சைவர்! சிவனின் ஆசிர்வாதம் பெறுவர்!!

SCROLL FOR NEXT