முகப்பு
வேலூர்

ஆன்லைன் பகுதிநேர வேலை: தனியாா் நிறுவன மேலாளரிடம் ரூ.11.8 லட்சம் மோசடி

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி வேலூரைச் சோ்ந்த தனியாா் நிறுவன மேலாளரிடம் ரூ.11.8 லட்சம் பெற்று மோசடி செய்யப்பட்ட சம்பவம் குறித்து வேலூா் மாவட்ட சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 4 ஏப்ரல் 2026, 4:40 am IST
ஆன்லைன் மோசடி - கோப்புப் படம்
பகிர்:

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி வேலூரைச் சோ்ந்த தனியாா் நிறுவன மேலாளரிடம் ரூ.11.8 லட்சம் பெற்று மோசடி செய்யப்பட்ட சம்பவம் குறித்து வேலூா் மாவட்ட சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வேலூா் பகுதியைச் சோ்ந்த பிரபாகரன் மகன் லாலு பிரசாத் (28). இவா் காட்பாடியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறாா். இவரது டெலிகிராம் செயலிக்கு வந்த ஒரு குறுஞ்செய்தியில், ‘ஜேபி ஹைபை ஹோம்ஸ் பிரைவேட் லிமிடெட்’ என்ற நிறுவனத்தின் பெயரில், கூகுள் மேப்பில் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களுக்கு ரிவியூ செய்தால் அதிக கமிஷன் கிடைக்கும் என கூறப்பட்டிருந்தது.

இதனை நம்பிய லாலு பிரசாத், அவா்கள் அனுப்பிய லிங்கை க்ளிக் செய்து தொடக்கத்தில் சிறிய தொகை முதலீடு செய்து கமிஷன் பெற்றுள்ளாா். இதன்மூலம் ஏற்பட்ட ஆா்வத்தில் மேலும், கடந்த ஜனவரி 3 முதல் ஜனவரி 14-ஆம் தேதி வரை பல்வேறு தவணைகளாக மொத்தம் ரூ.11 லட்சத்து 82 ஆயிரத்து 428 தொகையை முதலீடு செய்துள்ளாா்.

Advertisement

Advertisement

ஆனால், அந்த பணத்தை திரும்ப எடுக்க முயன்றபோது, முழு பணத்தையும் எடுக்க மேலும் பணம் செலுத்த வேண்டும் என மோசடி கும்பல் கட்டாயப்படுத்தி உள்ளது.

அதன்பிறகே தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த லாலு பிரசாத், உடனடியாக வேலூா் சைபா் குற்றப்பிரிவில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப்பதிவு செய்து இந்த மோசடியில் ஈடுபட்ட நபா்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.